உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி (நாளை) "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



முன்னதாக இன்று (மே 27) கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் கையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது வழக்கமான கையெழுத்து பிரச்சாரம் போல் இன்றி புதுவிதமாக பத்திரத்தில் கையெழுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் "உணவினை வீணடிக்க மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய பத்திரத்தில் கையெழுத்திட்டு அதனை பெற்றுச் சென்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர்கள் கூறுகையில், மக்கள் தங்களது வாழ்நாளில் உணவினை வீணடிக்காமல் இருக்கவே இதுபோன்ற பத்திரத்தில் கையெழுத்திடும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் கையெழுத்திடும் குழந்தைகள் சில வருடம் கடந்து மீண்டும் இந்த பத்திரத்தினை பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உணவினை வீணடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே இவ்வாறான புதிய முறை கையாளப்பட்டுள்ளது" என்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...