உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி (நாளை) "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



முன்னதாக இன்று (மே 27) கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் கையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது வழக்கமான கையெழுத்து பிரச்சாரம் போல் இன்றி புதுவிதமாக பத்திரத்தில் கையெழுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் "உணவினை வீணடிக்க மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய பத்திரத்தில் கையெழுத்திட்டு அதனை பெற்றுச் சென்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர்கள் கூறுகையில், மக்கள் தங்களது வாழ்நாளில் உணவினை வீணடிக்காமல் இருக்கவே இதுபோன்ற பத்திரத்தில் கையெழுத்திடும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் கையெழுத்திடும் குழந்தைகள் சில வருடம் கடந்து மீண்டும் இந்த பத்திரத்தினை பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உணவினை வீணடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே இவ்வாறான புதிய முறை கையாளப்பட்டுள்ளது" என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...